
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்க தீர்மானம்
ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (01.06.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்த விடயம் தொடர்பாக ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேலை, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் (Laugfs Gas) விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிருவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.