
யாழ் நல்லூர் கந்தன் வளாகத்தில் விபச்சார விடுதியா? சமூக ஆர்வலர்கள் விசனம்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லுார் கந்தன் பின் வீதியில் வீடு ஒன்றில் விபச்சார விடுதி ஒன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிலர் குறித்த வீட்டை தற்போது பொறுப்பெடுத்து அதனை விடுதியாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் அந்த வீட்டில் பெண்கள் வந்து செல்வதாக அயலவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் நல்லூர் கந்த ஆலய புனித பூமியில் யாழ் மாநகரசபை இந்த விடுதியை இயங்குவதற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தது என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.