நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் அடைமழையுடனான வானிலையால் நாட்டின் 21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்களை சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு | 8 000 People Affected By Inclement Weather Countryஅதோடு சீரற்ற வானிலையால் கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.