வவுனியா குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியா குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியா (Vavuniya) - கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14.03.2025) காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞர் கனகராயன் குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது, குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மூழ்கி இளைஞர் பலி | Man Found Dead In Kanagarayan Pond Vavuniya

ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மேலும், சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.