பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம்

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இன்று (17) காலை பெய்த கனமழை உடனான கூடிய காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தம்பலகாமம் பிரதேச பகுதியின் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் வடக்கு மற்றும் பாரதிபுரம் உட்பட பல இடங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.