
பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
நாட்டில் நேற்றும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, பாணந்துறை, ஹிரானாவில் நடந்த ஒரு ஒன்றுக்கூடலின் போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது, 35 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இரண்டு தாக்குதல்காரர்கள் டி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் எனினும் இதற்கான காரணம் வெளியாகவில்லை.