நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - கொலையா என்ற கோணத்தில் விசாரணை

நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - கொலையா என்ற கோணத்தில் விசாரணை

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த துயர சம்பவம் நேற்று அம்பாறை - சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடங்கா - 02 பௌஸ் மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து காவல்துறையினரும் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - கொலையா என்ற கோணத்தில் விசாரணை | Boy Body Recovered From Water Hole Investigation

இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.

எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.

நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் - கொலையா என்ற கோணத்தில் விசாரணை | Boy Body Recovered From Water Hole Investigation

அத்துடன் குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படகின்றது.

இது தவிர மரணம் அடைந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGallery