ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான “சுபோதானி குழு அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (Ceylon teachers service union) பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுபோதானி குழு அறிக்கையின்படி, சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்க ரூ.46 பில்லியன் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

2022 வரவுசெலவுத் திட்டத்தில் இந்த சம்பள முரண்பாடுகளில் 1/3 பங்கு நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம் | Increase Salary Allowance For Government Employees

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தவில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, ஒரு பொதுவான முடிவை எட்டுவேன், பின்னர் அரசாங்கத்துடன் விவாதிப்பேன் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.