யாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் யாருடையது
யாழ், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் காணாமல்போன மோட்டார் சைக்கிளே இவ்வாறு காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.