இலங்கையில் அதிகரித்து வரும் மற்றுமொரு ஆபத்து

இலங்கையில் அதிகரித்து வரும் மற்றுமொரு ஆபத்து

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின் படி, 2025 ஜனவரியில் 4,900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் மொத்தமாக 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 2025 இம்மாதம் 1 திகதி முதல் 3 திகதி வரை, 419 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையான டெங்கு நோயுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 3,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் ஆண்டிற்கான மொத்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 49,873 ஆக உயர்வடைந்திருந்தது.

இலங்கையில் அதிகரித்து வரும் மற்றுமொரு ஆபத்து | Another Growing Danger In Sri Lanka

2024 ஆம் ஆண்டின் இறுதியில் 24 டெங்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் டெங்கு நோயாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் 15.6 சதவீதமானோர் பதிவாகியுள்ளதுடன் 839 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 13.4%, 719 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் பகுப்பாய்வில், கண்டி (347), காலி (334), மட்டக்களப்பு (317), இரத்தினபுரி (293), யாழ்ப்பாணம் (217), மாத்தறை (211), மாத்தளை (147), கேகாலை (144), களுத்துறை (143), திருகோணமலை (124), ஹம்பாந்தோட்டை (122), பதுளை (107), குருநாகல் (105), மற்றும் மொனராகலை (101) ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

2025 ஜனவரி 1 முதல் பெப்ரவரி 3 வரை நாட்டில் பதிவான மொத்த வழக்குகளில் மாகாண ரீதியாக, நோக்கும் போது 44.7% டெங்கு நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தென் மாகாணத்தில் 12.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதிப்குதியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பு அதிக ஆபத்துள்ள 16 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.