
கொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 50 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 55 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளதுடன், புதிதாக 810 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு 12 இலட்சத்து 30 ஆயிரத்து 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் 5 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்த 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.