அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான (Welfare Benefits Board) விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று (25) முதல் மேலதிக அவகாசம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக .நலன்புரிப் பலன்கள் வாரியம் அறிவித்துள்ளது.

அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரிப் பலன்கள் சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல் | Aswesuma Welfare Allowance Application From Today

முதல்கட்ட பயனாளிகள் தேர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என பயனாளிகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

அதற்கான கால அவகாசம் இன்று முதல் அடுத்த மாதம் 15ம் திகதி வரை அமுலில் உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 455,000 ஆகும்.

முதற்கட்டமாக பதினேழு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.