நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை!

நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (25) ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை! | The Advanced Level Exams Begin Tomorrowஇம்முறை கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு 320, 183 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 253, 390 பேரும் 79, 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.