தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

கொஸ்லந்தவில் உள்ள ஹாமுதுருகந்த பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (22-11-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

இது சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது,

​​தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதன்படி, நடாத்தப்பட்ட விசாரணையில், காணாமல்போன நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நபர் ஒருவருடன் ஹாமுதுருகந்த பகுதிக்கு சென்றதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், காணாமல்போன நபருடன் சென்றதாகக் கூறப்படும் பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்து, தலையை புதைத்துள்ளது தெரியவந்தது.

இதன்படி, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் ஹரபெகம, தனமல்வில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் ஊவ குடோஓய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்ததுடன், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மேற்படி பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை குறித்து ஊவ குடோஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரான பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.