நாளை கூடுகிறது புதிய நாடாளுமன்றம் : அதிரடியாக மாற்றப்பட்ட மரபுகள்

நாளை கூடுகிறது புதிய நாடாளுமன்றம் : அதிரடியாக மாற்றப்பட்ட மரபுகள்

புதிய நாடாளுமன்றம் நாளையதினம்(21) கூடவுள்ள நிலையில் இதுகாலவரை காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த மரபுகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்வை முடிந்தவரை எளிமையாக நடத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாக சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன(Kushan Jayaratne) கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

“நாடாளுமன்ற வளாகத்தில் இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது அதேவேளை, நவம்பர் 21ஆம் திகதி வியாழன் அன்று புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் ஜய மங்கள பாடலும் இடம்பெறாது” என ஜயரத்ன தெரிவித்தார்.

நாளை கூடுகிறது புதிய நாடாளுமன்றம் : அதிரடியாக மாற்றப்பட்ட மரபுகள் | Parliamentary Traditions Changed

இந்தத் தளம் Google AdSense தொடர்புடைய விளம்பர இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. AdSense தானாகவே இந்த இணைப்புகளை உருவாக்குகிறது. இவை கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவக்கூடும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) வரவேற்கப்பட்டு காத்திருப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கிருந்து அவர் கொள்கை விளக்கத்தை வெளியிடும் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

நாளை கூடுகிறது புதிய நாடாளுமன்றம் : அதிரடியாக மாற்றப்பட்ட மரபுகள் | Parliamentary Traditions Changed

வியாழன் கூட்டத்தொடரின் போது சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake)சபையின் தலைவராகவும் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.