புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை!

  பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாக சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை! | Ban On Publishing Grade 5 Scholarship Exam Results

அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.