
வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்வுக்கூறல்!
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
இது தொடர்பில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவித்தலில், “வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தென்மேற்கு, மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.