நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி

நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி கிட்டத்தட்ட நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் அச்சிடப்பட்ட நாணயத்தின் பிரீமியம் ஏலத்தின் மூலம் ஏழு நாட்களில் 70 பில்லியன் ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது.

நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி | Central Bank Of Sri Lanka Printed Billion Rupeesஇலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, பல பணப்புழக்க கருவிகள் மூலம் உள்ளூர் சொத்துக்களுக்காக கிட்டத்தட்ட நூற்று ஆறு பில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வங்கி அமைப்பில் சேர்க்கப்படும் மேலதிக பணம் 190 பில்லியன் ரூபாய்களாக உயர்கிறது. இது மத்திய வங்கியின் வழமையான திறந்த சந்தை செயற்பாடுகளுடன் ஒத்துப்போவதோடு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யாது.

அதேசமயம் மத்திய வங்கிச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு உரிய பணத்தை அரசாங்கம் அச்சிட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  Gallery