கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசை

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசை

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசை | Token Queue Again To Get Pass Port Srilanka

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நீண்ட வரிசை தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.