தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஸ்தலத்தில் பலியான இளைஞன்
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்ட நிலையில் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
குறித்த இடத்தில் மின்கம்பி அறுந்த நிலையில் காணப்படுவதனால் குறித்த மின்கம்பி முன்பே அறுந்து விழுந்திருந்ததா அல்லது விபத்தால் விழுந்ததால் மின்சாரம் தாக்கியதா என பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.