இன்றைய தினம் வங்கிகளின் செயற்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
விசேட பொது விடுமுறை தினத்தை அரசாங்கம் அறிவித்த போதிலும், அனைத்து வர்த்தக வங்கிகளும் இன்று (23.09.2024) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை செப்டம்பர் 23ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக இருக்காது.
இதனை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026