வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 28,301 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரன் 12,810 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,117 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தபால் மூல வாக்கு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,257 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.   

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.