மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின....

மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின....

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,733 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3,401 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 470 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளின் படி மொனராகலை மாவட்டத்தில் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.