தகாத உறவால் இராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல்

தகாத உறவால் இராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல்

முன்னாள் இராணுவ வீரரின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ வீரரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவால் இராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல் | Assault On Army Wife Inappropriate Relationship

இந் நிலையில், தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான முன்னாள் இராணுவ வீரரின் மனைவி கணவர் இறந்ததையடுத்து சந்தேக நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் பணம் கோரி முன்னாள் இராணுவ வீரரின் மனைவியைத் தினமும் தாக்கி துன்புறுத்துவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.