முல்லைத்தீவில்அதிர்ச்சி சம்பவம்... வீதியில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவில்அதிர்ச்சி சம்பவம்... வீதியில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில்அதிர்ச்சி சம்பவம்... வீதியில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த நிலை! | Mullaitivu Gun Shoot One Person Was Injured

சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில்அதிர்ச்சி சம்பவம்... வீதியில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த நிலை! | Mullaitivu Gun Shoot One Person Was Injured

துப்பாக்கிச்சூட்டில் கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதான கமக்கார அமைப்பின் செயலாளரான  செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.