மகன் மரணம்; தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர்

மகன் மரணம்; தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர்

 மொனராகலை, தம்பகல்ல பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மொனராகலை, தம்பகல்ல பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மகன் மரணம்; தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர் | Teacher Who Made A Wrong Decision His Own Life

இவரது மூத்த மகன் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.