காதலர்கள் செய்த மோசமான செயல்; நண்பிக்கு செய்த துரோகம்!

காதலர்கள் செய்த மோசமான செயல்; நண்பிக்கு செய்த துரோகம்!

தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணம் மோசடியாக பெற்ற 18 வயதுடைய யுவதியும், யுவதியின் காதலனும்கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரான யுவதியான காதலி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்று இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர்.

காதலர்கள் செய்த மோசமான செயல்; நண்பிக்கு செய்த துரோகம்! | Friend S A R M Lovers Stole The Card

இதன்போது, யுவதியின் தோழி தனது ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்ற பின் ஏ.ரி.எம் அட்டையை தனது கையடக்கத் தொலைபேசியின் அட்டைக்குள் வைத்துள்ளார்.

இதனை அவதானித்த யுவதி, புகைப்படம் எடுப்பதாகக் கூறி தனது தோழியின் கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு அதிலிருந்த ஏ.ரி.எம் அட்டையைத் திருடியுள்ளார்.

காதலர்கள் செய்த மோசமான செயல்; நண்பிக்கு செய்த துரோகம்! | Friend S A R M Lovers Stole The Card

பின்னர், இருவரும் தங்களது வீட்டிற்குச் சென்ற பின்னரே தோழி தனது ஏ.ரி.எம் அட்டை காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தோழி யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரது பையை சோதனையிட்ட போது தனது ஏ.ரி.எம் அட்டையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து, யுவதியின் தோழி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்டதாகக் கூறப்படும் 310,000 ரூபா பணம் யுவதியின் காதலனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.