10 இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு 1,019,642 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள தரவுகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா, சீனா (china), ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும், மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேர் வருகை தந்துள்ளனர்.
ஜூலை 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,574 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25.2 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.