நாட்டில் வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

நாட்டில் வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (2024.07.21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

நாட்டில் வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம் | Changes In The Weather The Country Today Weather

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

தீவின் மற்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்வதோடு காற்றின் வேகமானது 30 முதல் 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.