தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது

சிறுமி ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர் மத்துகம - மானானவத்த, யட்டியன பிரதேசத்தில் பதினைந்து வயதுடைய சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமியின் பாட்டியின் இளைய சகோதரரான சந்தேக நபர், சிறுமி வசித்து வந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தனது தங்கையை மடியில் வைத்துக் கொண்டு வீட்டின் முன் அமர்ந்திருந்த போது, ​​சந்தேக நபர் குடித்துவிட்டு வந்து சிறுமியை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு இழுத்துச் சென்று தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது | A Man Was Arrested For Molesting A Girl

இதன் படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஐம்பத்தேழு வயதுடையவர் எனவும், அவர் மத்துகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மத்துகம காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பராக்கிரம உடவத்த தலைமையில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.