மட்டக்களப்பில் பயங்கர விபத்து சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

மட்டக்களப்பில் பயங்கர விபத்து சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் நேற்றையதினம் (29-06-2024) இடம்பெற்றுள்ளது.  

மட்டக்களப்பில் பயங்கர விபத்து சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | Motorcycle Van Collision Hand Batticaloa One Died

மேலும், மோட்டார் சைக்கிள் - வான் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.