
அரச பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடம் : வெளியான அறிவிப்பு
அரச பாடசாலைகளில் உள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களும் எதிர்வரும் சில மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(Lakshman Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
நடனம், அழகு மற்றும் கலை பாடங்கள் தொடர்பான அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளிடமிருந்து பெற முடியாது.
எனவே பட்டதாரிகளை ஆசிரியர் உதவியாளர்களாக நியமித்து பயிற்சி அளித்து பாடசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்றார்.
இதேவேளை நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.