வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர் இலங்கையில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர் இலங்கையில் கைது

பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுமார் ரூ. 8 கோடி 50 இலட்சம் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

33 வயதுடைய இந்திய பிரஜையான குறித்த சந்தேகநபர்,  போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர் இலங்கையில் கைது | Indian From Abroad Arrested In Sri Lankaஅவரிடமிருந்து 8.54 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து பிரவேசித்த சந்தேகநபர், இந்தியாவுக்கு இந்தப் போதைப்பொருளை கடத்த முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.