வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை; பாலியல் பலாத்காரம்

வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை; பாலியல் பலாத்காரம்

 கொழுத்தும் வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை; பாலியல் பலாத்காரம் | Teacher Who Slept Awning Door Open Was Raped

இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட வெளியே சென்று விடுவதால் இளம்பெண் வீட்டில் மகள்களுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (07) இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது போதை ஆசாமி ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கூச்சலிட்டால் பெண் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.

பின்னர் கத்திமுனையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஒட முயன்றபோது பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போதை ஆசாமியை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போதையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.