தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... கணவனின் சடலத்தை பார்த்ததும் மனைவி எடுத்த விபரீத முடிவு!

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... கணவனின் சடலத்தை பார்த்ததும் மனைவி எடுத்த விபரீத முடிவு!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் கணவன் வெட்டுகாயங்களுடன் சடலமாக இருப்பதை பார்த்த மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதியில் நேற்றையதினம் (02-05-2024) மாலை  இடம்பெற்றுள்ளது

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... கணவனின் சடலத்தை பார்த்ததும் மனைவி எடுத்த விபரீத முடிவு! | Wife Die Poison After Seeing Husband Body Vavuniya

கீரிசுட்டான் பகுதியில் அரைக்கும் ஆலையொன்றை நடத்தி வந்த நபரொருவரே இவ்வாறு வீட்டில் வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று மதியம், தகவலறிந்து அங்கு சென்ற மனைவி சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக வீட்டுக்கு சென்ற அவர் நஞ்சருந்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... கணவனின் சடலத்தை பார்த்ததும் மனைவி எடுத்த விபரீத முடிவு! | Wife Die Poison After Seeing Husband Body Vavuniya

குறித்த சம்பவத்தில் 45 வயதான வேதாரணியம் லோகநாதன், 37 வயதான லோகநாதன் பரமேஸ்வரி என்னும் இருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன், மனைவி இருவரும் அண்மைகாலமாக பிரிந்து வாழ்ந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

குறித்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... கணவனின் சடலத்தை பார்த்ததும் மனைவி எடுத்த விபரீத முடிவு! | Wife Die Poison After Seeing Husband Body Vavuniya

மேலும், லோகநாதனின் சடலம் காணப்பட்ட வீட்டின் மலசலகுழியையும் உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது, சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை நடந்து வருகிறது.