முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது

முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் கடத்துவதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது | 7 People Arrested Kidnapping 44 Cows Mullaitivuசந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் அவர் கூறினார்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் தெரியவந்தது.

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது | 7 People Arrested Kidnapping 44 Cows Mullaitivuகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி தனபால, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது | 7 People Arrested Kidnapping 44 Cows Mullaitivu

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது | 7 People Arrested Kidnapping 44 Cows Mullaitivu

முல்லைத்தீவில் 44 மாடுகளை கடத்தி சென்ற 7 பேர் கைது | 7 People Arrested Kidnapping 44 Cows Mullaitivu