வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு..!

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதன் மூலம், வரி வருமான இலக்குகள் கணிசமான அளவு அதிகரிக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனினும், இது தொடர்பில் இதுவரையில் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நாட்டுக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கான தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு | Ban On Import Of Vehicles In Sri Lankaஇலங்கை போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் சிறந்த வாகனங்களைக் கொள்வனவு செய்யலாம். அவ்வாறு இடம்பெறாமையே இங்கு பிரச்சினையாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கு, பாவனை செய்யப்பட்ட வாகனங்களே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றிலும் ஜப்பானிலிருந்தே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதேநேரம் ஜப்பான் வாகனங்களே தரத்தில் சிறந்தவை. அவற்றைக் குறைந்த விலைகளோடு தரமான வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.

இவ்வாறான பின்னணியில் சில வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களின் திருத்தப் பணிகளுக்காக அதிக பணத்தைச் செலவிடுவதாகத் தெரிவிக்கின்றனர். ஆகையால் வாகனத்தின் விலை அதிகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு | Ban On Import Of Vehicles In Sri Lankaஇந்த நிலையில், உரிய முறையில் குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எனினும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.