புதிய கல்வியியற் கல்லூரி ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்..!

புதிய கல்வியியற் கல்லூரி ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்..!

புதிய கல்வியியற் கல்லூரி ஆட்சேர்ப்புக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 23,005 பேர் பணியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.