15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் யார்? விசாரணையில் சிக்கிய உறவுகள்!

15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் யார்? விசாரணையில் சிக்கிய உறவுகள்!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வயிற்று வலிக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, ​​சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் யார்? விசாரணையில் சிக்கிய உறவுகள்! | 15 Year Old Girl Pregnant Father And Sonகடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூத்த சகோதரரால் பலமுறை வன்புணரப்பட்டமை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே மேற்படி விடயங்ள் தெரியவந்துள்ளது. அதோடு தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.