பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

பண்டிகைக் காலங்களில் கோழி (Chicken) இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

எனினும் முன்னர் 1,100 ரூபாவாக காணப்பட்ட கோழி இறைச்சியின் விலையானது பண்டிகைக்காலத்தில் 1,500 ரூபாவாக காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தையடுத்து முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதுடன், மீண்டும் முட்டையின் விலை அதிகரித்தால் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.