இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ; நடந்தது என்ன..
கடையொன்றிலிருந்து பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெறுள்ளது. உயிரிழந்தவர் கடையின் உரிமையாளரின் மனைவியான 41 வயது யமுனா நிரோஷினி என்ற பெண்ணாவார்.

தனது கணவருடன் கடையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.