தாய் மற்றும் மகனின் கொடூர செயல்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தாய் மற்றும் மகனின் கொடூர செயல்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹிதோகம திவுல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் குடும்ப தகராறு காரணமாக, மனைவி மற்றும் மகனால் கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் நேற்று முன்தினம் (09) சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், அது முற்றாக பல துணிகளில் சுற்றப்பட்டு கிரானைட் கல்லில் கட்டி ஏரியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

தாய் மற்றும் மகனின் கொடூர செயல்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Wife And Son Killed The Father In Sri Lankaகுறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​உயிரிழந்தவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயது மனைவி மற்றும் 24 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கடந்த 8 ஆம் திகதி காலை 9 மணி அளவில் தாய் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மகனும் தலையிட்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாய் மற்றும் மகனின் கொடூர செயல்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Wife And Son Killed The Father In Sri Lankaகொலையின் பின்னர் சடலத்தை ஏரிக்கு எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் சந்தேகநபர்களின் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

அன்றைய தினம் மாலை ஏரிக்கு சடலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.