இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. 

குறித்த வர்த்தகர் கடந்த வருட இறுதியில் இருந்து இலங்கையில் தங்கியுள்ளார்.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

தங்கியிருந்த காலப்பகுதியில் 4 தடவைக்கு மேல் லண்டனிலிருந்து 12 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான மதிப்பான பவுண்ஸ்களை மாற்றியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தற்போது தற்கொலைக்கு முயன்ற பின்னரே இது தொடர்பாக வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான பங்களாவிலேயே வர்த்தகர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

குறித்த வர்த்தகர் 18 நாட்கள் தங்குவதாக தெரிவித்தே அவர் இலங்கைக்கு சென்றதாக அவரது மனைவி கூறினார்.

இருந்தும் தான் மேலும் சில நாட்கள் இலங்கையில் தங்க வேண்டியுள்ளதாகவும் தனது நண்பனுடன் சேர்ந்து கம்பனி ஒன்று ஆரம்பிக்க உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் லண்டனிலிருந்து பணம் பெற்றுள்ளார்.

தனது வீட்டுக்கு வந்து தங்கியுள்ள நேரத்தில் பல தடவைகள் தனது வீட்டு சமையல்காரர் மற்றும் பாதுகாவலரை விடுமுறையில் அனுப்பி தனியே அங்கு தங்கியுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பாதுகாவலர் வந்த போது வீட்டின் சோபா செற்றியில் மயக்க நிலையில் கிடந்த வர்த்தகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரியவருகின்றது.

அதன் பின்னரே குறித்த வர்த்தகர் துாக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விடயம் தெரியவந்துள்ளது.