
பெங்களூரு அணிக்கு 3 ஆவது தோல்வி... லக்னோவிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 56 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் கே.எல்.ராகுல் 20 ரன்களும், நிகோலஸ் பூரன் 40 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
கோலி 22 ரன்களும், ரஜத் பட்டிதார் 29 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 33 ரன்களும் சேர்த்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப இலக்கத்தில் வெளியேற 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் 9 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.