24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி மக்கள் பாவனைக்கு!

24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி மக்கள் பாவனைக்கு!

வட மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
 

வட மாகாணத்தின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பகுதியிலுள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குறித்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
 

அதன்படி, வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.