கல்வி அமைச்சரிடம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

கல்வி அமைச்சரிடம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிஙகம் எழுதிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், அரசினால் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்றது.

உண்மையில் அது வரவேற்கத்தக்க விடயம். இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் அரசிடமும், உலக உணவுத்திட்ட அமைப்பிடமும் நாம் முன்வைத்த வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை நன்றியுடன் பாராட்டப்படவேண்டிய விடயம்.