இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையினால் ஏற்பட்டுள்ள குழப்பம்: பொலிஸார் விசாரணை..!

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையினால் ஏற்பட்டுள்ள குழப்பம்: பொலிஸார் விசாரணை..!

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையொருவர் செய்த பொய்யான முறைப்பாடு தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய பிரஜையொருவர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்று போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையினால் ஏற்பட்டுள்ள குழப்பம்: பொலிஸார் விசாரணை | British Citizens False Complaints To The Policeஇதனைத்தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரை தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.