யாழில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு!

யாழில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய்ப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.

இதன்போது சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது-66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.

யாழில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு! | Jaffna Recovery Of The Womans Bodyமேலும், சடலம் தொடர்பான இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.