![](https://yarlosai.com/storage/app/news/f6f249842d079bb371b628b1c77ae5ef.png)
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பது உறுதி!
செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
குறித்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இதுபோன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.