ஐஸ் ரக போதை பொருளுடன் 08 பேர் கைது

ஐஸ் ரக போதை பொருளுடன் 08 பேர் கைது

ஐஸ் ரக போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்  பகுதியில் போதைப்பொருள் தடுப்பு   பிரிவு  அதிகாரிகள் முன்னேடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போது    நேற்று குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்   மதுவரித் திணைக்களத்தின் மற்றுமொரு  அதிகாரி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.